Mai 3, 2024

உயிரிழந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் கனகரட்ணம் பார்த்தீபன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த தனது தந்தையின்  நீண்ட நாள் ஆசையாகிய சட்டத்தரணியாக வர வேண்டும் என்ற கனவை நனவாக்கிய மகனான கனகரட்ணம் பார்த்தீபன்  நேற்று (18)சட்டத்தரணியாக உச்சநீதிமன்றில் சத்தியபிரமாணம் செய்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் முதலாவது சட்டத்தரணியாக இவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சார்ந்த இவர் சட்டத்தரணியாக
சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் பிரதேச மக்கள் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்
அத்தோடு எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளிலும் சட்ட ரீதியில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க இவர் முன்னின்று உழைக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்