Mai 19, 2024

கிழக்கு நினைவேந்தலில் வடக்கு இளைஞோர்?

சத்துருக்கொண்டான் பகுதியில் 186 தமிழர்கள் படுகொலை நினைவு அஞ்சலி நிகழ்வில் வடக்கிலிருந்து சென்றிருந்த இளையோர் பங்கெடுத்துள்ளனர்.    குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர், தமிழரசு கட்சி உறுப்பினர்கள், ஏனைய கட்சி உறுப்பினர்கள் உற்பட மக்களும் கலந்து கொண்டனர்

இதனிடையே மட்டக்களப்பு மண்ணில் தியாகதீபம் திலீபன்; நினைவாக இளையோர் மேற்கொள்ளும் ஐந்து அம்ச கோரிக்கையுடன் ஐந்து நாள் நடைபயணம் பற்றிய விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அதாவது தாயக இளையோர் சமூகத்தால்  முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ் நினைவு தூபி வரையாக முன்னெடுக்கப்படவுள்ள பயணம் பற்றி ஊடக சந்திப்பில் விளக்கப்பட்டுள்ளது.