Mai 3, 2024

மாலைதீவு குடும்பம் கைது!

மாலைதீவை சேர்ந்த குடும்பமொன்று இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடும்பத்தின் 5 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பத்தில் 2 வயது குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பம் கடந்த 5 வருடங்களாக சட்டவிரோதமாக குடியிருப்பதாகவும், இவர்கள் தொடர்பாக மாலைதீவு தூதரகம் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முறையற்ற விதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை அடையாளம் காணும் பணியில் இலங்கை பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.