Mai 2, 2024

சஜித்தின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கருணா! வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபயவின் வாக்குகளை சிதறடிக்க சஜித் மேற்கொண்ட சதித்திட்டமே இதுவென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் பிரசார மேடை ஒன்றிலேயே இராணுவத்தினர் தொடர்பாக பேசியிருந்தேன்.

இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால் தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியும்.

இதற்காக கைது செய்ய வேண்டுமென சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. நாட்டில் மாற்றம் ஒன்று வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே மிதவாதம் என்ற போக்கில் கதைத்திருந்தேன்.

அன்றைய தினம் நான் பேசிய முழுமையான காணொளியை பார்த்தால் தெரியும். நான் பேசிய முழுமையான காணொளியை ஒளிபரப்பாமல் இடையில் 02 நிமிட காணொளியை மாத்திரம் ஒளிபரப்பியமையாலேயே இவ்வாறான பிரச்சினை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.