Mai 8, 2024

அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல்களை திரட்டும் கோட்டாபய!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றார்.”

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ இதனை தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சிறைச்சாலைகளில் பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்வார் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியும்.

ஆனால், இதில் பெயரைப் போட்டுக் கொள்வதற்காகவே அது சம்பந்தமாக பிரதமரைச் சந்தித்து சுமந்திரன் தரப்பு பேச்சு நடத்தியது” என்றார்.