Mai 6, 2024

தனது பதவியை இராஜினாமா செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர்..!!

 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கறுப்பினத்தவர்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வொசிங்டொன் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

கறுப்பின பிரஜையான மேரி எலிசபெத் டெலர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் அமைப்பு செயற்பாடுகள் தொடர்பான உதவி பணிப்பாளர் பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மனச்சாட்சியுடன் தன்னால் பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.