Mai 5, 2024

ஸ்ரீலங்கா வந்த ஈரானியர்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

ஸ்ரீலங்கா வந்த ஈரானியர்களில் மூவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை வந்துள்ள ஈரானைச் சேர்ந்தவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில், உமாஓயா திட்ட கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வந்த ஈரானியர்களிடம் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவர்களில் மூவர் தொடர்பான அறிக்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை உமாஓயா கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக 86 ஈரானியப் பிரஜைகள் நேற்று இலங்கையை வந்தடைந்திருதனர்.

இவர்களுக்கு கட்டுநாயக்க .விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.