Mai 5, 2024

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பரிசோதனையில் வெற்றி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில், இதுவரையில் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் பல நாட்டு விஞ்ஞானிகளும் தீவிர முயற்ச்சியில் ஈடுப்பட்டு கொண்டுருக்கின்றனர்.

ஆனாலும், கொரோனா வைரஸுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில மருந்துகள் நோயை கட்டுப்படுத்த பயன்படுகின்றன.

அந்த வகையில் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த மருந்தை நோயாளிகளிடம் பயன்படுத்தியில் மூன்றில் ஒரு பங்கு பேர் இறப்பிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.