Mai 3, 2024

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷவிடம் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

அதனபடி இந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் கூடும் செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்தில் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் செயலணியிடமே சகல அதிகாரங்களும் ஒப்படைக்கப்படடுள்ளன.

இதனையடுத்து தற்போது செயலணியின் பார்வை வடக்கு நோக்கி திரும்பியுள்ளது.

அந்தவகையில் வடக்கில் உள்ள நாக விகாரை மற்றும் சில பகுதிகளிலும் தொல்பொருள் பிரதேசங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை அனுராதபுரம் தூபராம விகாரை தொடக்கம் நாக விகாரை வரையில் சகல பகுதிகளையும் பாதுகாத்து நாட்டின் பாரம்பரியத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.