Mai 17, 2024

சிவிக்கு வந்த காசு!

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன்  மகாலிங்கம் அவர்கள் தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் ரூபா ஒருலட்சத்தி ஓராயிரத்தை நீதியரசரின் இல்லம் தேடி வந்து இன்று காலை கையளித்தார்.
செயல் கண்டு என் கண்கள் பனித்தன எவ்வளவு சுமையும் பொறுப்பும் எம்தோள்களின் மேல் என்ற இமாலயப்பொறுப்புணர்வு மேலோங்க இதயம் கனத்தது.
உங்கள் ஒவ்வொரு சதத்தையும் நாங்கள் மிகப்பொறுப்புடனேயே உபயோகிப்போம் என்ற சத்தியத்தை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கின்றோம் என கட்சி பிரமுகர்; ஒருவர் பதிவிட்டுள்ளார்.