Oktober 22, 2024

மீண்டும் வெளியே வந்தார் ஞானசார தேரர்

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி கூரகல விகாரை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மத நல்லிணக்கத்தை குலைத்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும்  விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் , ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் செல்ல அனுமதித்தது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert