September 19, 2024

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் மாபெரும் பிரசார கூட்டம் யாழில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க! | President Ranil Wickremesinghe In Jaffna

குறித்த பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert