September 16, 2024

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யத்தடை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும்,

நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதல் நாள் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்தன.

தபால் மூல வாக்களிப்பு இன்று மற்றும் நாளை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

04ஆம், 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert