Mai 2, 2024

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கூட்டாக இணைந்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert