Mai 2, 2024

வந்தவர்கள் விடுவிப்பு:சென்றவர்களிற்கு சிறை!

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) தமிழகத்தை சென்றடைந்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

வவுனியா நெடுங்குழி பகுதியை சேர்ந்த நந்தகுமார்  அவரது மனைவி  மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை  சேர்ந்த  5 பேரே செவ்வாய்க்கிழமை (06) மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை இராமேஸ்வரத்தையடுத்துள்ள தனுஸ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்துள்ளனர். நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக குடும்பம் ஒன்று தமிழகம் சென்றுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளதுஃ

இதனிடையே இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. 5  வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert