Mai 17, 2024

ரணிலுக்கு இன்னொரு சந்தர்ப்பம்!

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையினில்; புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு முறையாவது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்னிற்பார்.

ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என சுட்டிக்காட்டிய அவர், நோயாளி ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது கசப்பு மருந்து கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் எனவும், மக்கள் தயக்கம் காட்டினாலும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக அவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert