September 21, 2024

மட்டக்களப்பில் யாழ் மற்றும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 பேரும் கிழக்குப் பல்லைகலைக்கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடியதை அடுத்து, அந்த மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக போராட்டம் நடத்தும் பண்ணையாளர்களின் இடம் வரை சென்று, அங்கேயும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர், மாணவர்கள் பேருந்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பயணித்தபோது, பேருந்தை பின்தொடர்ந்து சென்ற சந்திவெளி காவல்துறையினர் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த 6 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert