Mai 19, 2024

ரணிலுக்கு கட்டம் சரியில்லையாம்!

நல்லாட்சி காலத்தில் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்த ரணிலுக்கு மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert