Mai 1, 2024

மீகஹாவத்தையில் கை குண்டுடன் பெண் கைது

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவில் தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைகுண்டொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண் 34 வயதுடைய குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மீகஹாவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.