Mai 4, 2024

கொழும்பில் பிரசித்திபெற்ற விகாரைக்குள் வெடிகுண்டு!

கொழும்பு – பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைக்குண்டு இன்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பரவுப் பணியாளரினால் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு விரைந்த குண்டு செயலிழப்பு பிரிவின் உதவியுடன் காவல்துறையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்க வைத்துள்ளனர்.

கைக்குண்டு எப்படி விகாரைக்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றிய விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி அதிகமான பௌத்த மக்கள் விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.