Mai 20, 2024

நாகதீபவில் வெசாக்காம்?

இலங்கையில் பௌத்தர்களின் முக்கிய மதநிகழ்வான  வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகை யாழ்ப்பாணம் மாவட்ட நயினாதீவில் மேற்கொள்ள புத்தசாசன அமைச்சு திட்டமிட்டு அதற்கான ஆயத்தக் கூட்டம் இன்று மாலை அலரி மாலிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் வெசாக் பண்டிகையில் பங்கெடுக்க இலங்கை ஜனாதிபதி,பிரதமர் என பலரும் படையெடுத்து வரலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.