Mai 18, 2024

அரியாலையில் தொடரூந்து விபத்து! ஆசிரியர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிப் பகுதியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் உந்துருளியில் தொடரூந்துக் கடவையை கடக்க முற்பட்டபோது தொடரூந்துடன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அாியாலைச் சேர்ந்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரயிரியில் தகவல் தொடர்பாடல் ஆசிரியராக கற்பிற்கும் 42 வயதுடைய விஸ்வநாதன் பாலரூபன் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.