Mai 19, 2024

தடைகளை தகர்த்து ஆரம்பமாகிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவு!

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வரும் முமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஐனநாயக ரீதியாக நடைபெறும் தொடர் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒத்துழைத்து எமக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வருவோம்.
அடக்குமுறைகளை தகர்தெறிந்து தொடரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் போராட்டத்தை நிச்சயம் சர்வதேசம் இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும்
நேற்றைய தினம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண அவர்களின் புரட்சி செய்ய நினைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கையாக கூறியிருந்தமையை வன்மையாக கண்டிப்பதுடன் சிங்கள தேசத்தில் நடைபெறும் போராட்டங்களை தடுக்காது இன்றைய எமது போராட்டத்திற்கு பல இடையூறுகளையும் பொலிஸ் மற்றும் இராணுவம் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஐனநாய ரீதியில் நாம் செய்கின்ற போராட்டங்களை நசுக்கின்ற செயற்பாட்டை சிங்கள தேசம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றதை நிச்சயம் சர்வதேசம் கவனத்தில் கொண்டு தமிழர்கள் இந்த தேசத்தில் நின்மதியாக வாழ வழிசமைக்க வேண்டும்.
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி