Mai 3, 2024

போராட்ட வருவார்களா?காத்திருக்கும் காவல்துறை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் யார் யார் போராட்டங்களை நடாத்தலாமென இலங்கை காவல்துறை புலனாய்வு பிரிவினர் தே அலைந்துவருகின்றனர்.

சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்து ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

கோரி;க்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் யார் யார் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என்பது தொடர்பில் காவல்துறை புலனாய்வாளர்கள் தே அலைந்துவருகின்றனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert