Mai 2, 2024

ஆனை வரும் பின்னே:கைது வரும் முன்னே!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் 8 பேருக்கு எதிராக தடை உத்தரவு அனுமதி கோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வுடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதியே எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி வவுனியா மற்றும் பூநகரி பகுதிகளிற்கும் விஜயம் செய்யவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert