Mai 20, 2024

இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; இரு விமானப்படை அதிகாரிகள் பலி இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகளே குறித்த விமானத்தில் பயணித்த பயிற்சியாளரும், பயிற்சி விமானியான பெஷான் வர்ணசூரிய எனும் இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்கு இலங்கை விமானப்படையின் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணையை நடத்த விசேட விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருமலை நிருபர் சூரியா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert