Mai 8, 2024

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில்இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. அதற்கு அமைவாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்த்திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இன்று 2023.07.2 தி/இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
சிறுவர்கள், மற்றும் இளையோர்களுக்கான “ தனி நபர் சுகாதாரம்“ பற்றிய செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
விரிவுரையாளராக திரு.ச..ஷியாம் சுந்தரம் ,PHI திரு.கு.சரவணபவன் PHI மற்றும் திருமதி உ.பரிமளா PHM கலந்துகொண்டவர்கள். அத்துடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்
திரு.A.D.பொனிபஸ்
திரு.M.டினேஷ்
ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert