Mai 20, 2024

அடிப்படை உரிமை தொடர்பில் ஒன்றுகூடுல்

அடிப்படை உரிமை தொடர்பில் ஒன்றுகூடும் சுதந்திரம்
பேச்சுச் சுதந்திரம்
கருத்துச் சுதந்திரம் மீறல் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் இனங்காணப்பட்ட பிரச்சணைகளுக்கு எதிர்காலத்தில் எவ்வாறான வகைகளில் தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என வருகைதந்த சிவில் சமூகத்தினரால் கருத்துக்களும்

ஆலோசணைகளும் முன்வைக்கப்பட்டது.அத்துடன் சிலவிடயங்களை சட்ட ரீதியாக அணுகவேண்டியுள்ளதனால் சட்டத்தரணிகள் குழாமுடன்பேசி தேவையான ஆலோசணை மற்றும் உதவிகளைப் பெறுவதெனவும் கலந்துரையாடப்பட்டது.
இதனடிப்படையில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்குமான மூலோபாய திட்டமிடல் கலந்துரையாடல் கூட்டமானது மீண்டும் மிக விரைவில் கொழும்பில் நடைபெறும்.
இந் நிகழ்வானது இன்று காலை 09.07.2023 மட்டக்களப்பு தண்ணாமுனையில் அமைந்துள்ள மியாமி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை Dri நிறுவணத்தின் முகாமையாளர் சட்டத்தரணி ஐங்கரன் அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் சபா சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாலர்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம்
பெண்கள் சம்மேளணம்
விவசாய சம்மேளணம்
கால் நடை பண்ணையாளர்கள் சம்மேளணம்
chrd நிறுவணம்
அரசு சாராதெண்டு நிறுவணங்களின் ஒன்றியம்.
என பலதரப்பட்ட அமைப்புகளும் கலந்து கொண்டு தேவையான உள்ளீடுகளை வழங்கியிருந்தது இன்றைய கலந்துரையாடலின் சிறப்பம்சமாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert