Mai 19, 2024

தேர்தல் சட்டங்களின் முக்கிய விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் ஆணையாளர்

தேர்தல் சட்டங்களின் முக்கிய விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலக உதவித்தேர்தல் ஆணையாளர் அவர்கள் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று காலை மட்டக்களப்பு தேர்தல்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது எல்லைக்கிராமங்களில் வசிக்கும் (குறிப்பாக மைலத்தமடு மாதவணை பிரதேசங்கள்)மக்களை இன்னும் வாக்காளர்கள் பட்டியலில் இணைக்காது இருப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் சார்பில் அதன் இணைப்பாளர் சபா.சிவயோகநாதன் மூலம் கேள்வி எழுப்ப பட்டது .
இது தொடர்பான சிறு கலந்துரையாடலின் பின்னர் இப்பிரச்சணை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டு மிக விரைவில் தீர்வுகாணப்படும் என உதவித் தேர்தல்கள் ஆணையாளார் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert