Mai 11, 2024

சிங்கப்பூரிலிருந்து மத்தியகிழக்கு நாட்டுக்குச் செல்லும் கோட்டா??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி.788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சிங்கப்பூர்நோக்கி தற்போது பயணிக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து மத்தியகிழக்கு நாட்டுக்குச்  செல்லவுள்ளதாக மாலைதீவு அரசாங்கத்தின் உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert