Mai 6, 2024

யாழில் தனியார் வங்கிக் கிளையில் 12 பேருக்கு தொற்று

யாழ்.நகரின் மத்தியில் உள்ள கொமர்ஷியல் வங்கியின் பிரதான கிளையில் 12 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கிளை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வங்கி கிளையில் பணியாற்றிய சுமார் 40 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. குறித்த வங்கி கிளையில் பணியாற்றும் 34 போிடம் நேற்றய தினம் பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

அவை பரிசோதிக்கப்பட்ட நிலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் அங்கு பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையை தற்காலிக மூட

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ்

கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.