Mai 8, 2024

வீட்டில்பூஜை வழிபாடு; 18 பேர் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையில் வீடு ஒன்றில் இன்று சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்றது.

அது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து வீட்டை பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிசார் முற்றுகையிட்ட நிலையில் பலர் தப்பியோடியுள்ளனர்.

இந் நிலையில் பூஜை இல் கல்லந்துகொண்ட 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளர் மற்றும் குருக்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து வந்தாறுமூலை பலாச்சோலை பகுதியில் சம்பவதினமான இன்று வீடு ஒன்றில் சுகாதார துறையினரிடம் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் விசேட பூஜை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பூஜை வழிபாட்டில் 65 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுட்டிருந்தனர். சுகாதார அதிகாரிகள் வருவதை அறிந்த பலர் தப்பி ஓடிய நிலையில் 18 பேரின் தரவுகள் பதியப்பட்டு அவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தியதுடன் பூஜை வழிபாட்டை ஏற்பாடு செய்த வீட்டின் உரிமையாளர் குருக்கள்ஆகியோருக்கு   எதிராக வழக்கு தாக்குதல் செய்ய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் அதேபகுதியில் இடம்பெற்ற மாரியம்மன் ஆலைய உற்றவத்தில் கலந்து கொண்ட 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது