Mai 8, 2024

முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என்றார்.

கொவிட் – 19 பரவல் செயலணி உட்பட மேலும் சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனனர்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.