Mai 3, 2024

துயர் பகிர்தல் இரஞ்சினி ஜெயரத்தினம

இரஞ்சினி ஜெயரத்தினம்
தோற்றம்: 30 ஏப்ரல் 1948 – மறைவு: 21 செப்டம்பர் 2020
யாழ். ஏழாலை தெற்கு தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இரஞ்சினி ஜெயரத்தினம் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணநாயகம் ஞானமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம் சீவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டேவிட் ஜெயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

றிச்சேட் ஜெயரஞ்சிற்(அவுஸ்திரேலியா), சாமுவேல் ஜெயந்தன்(பிரித்தானியா), சொலமன் ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோரஞ்சன்(ஓய்வுநிலை ஆசிரியர்), சுகந்தினி(பிரித்தானியா), காலஞ்சென்ற வினோதினி மற்றும் அல்பிறட் சுகந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனி(அவுஸ்திரேலியா), அகித்தா(பிரித்தானியா), நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயமணி, ஜெயராஜா, டொறத்தி மனோகரி, காலஞ்சென்றவர்களான ஜோன் தம்பிராஜா, வெஸ்லி இராஜகுமார் மற்றும் தயாளினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜாத்தா ஜேம்ஸ், சாள்ஸ், ஜோயல் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பீற்றர் ஞானராஜன்(சனோ), கிளெஸ்ரன் ஜேசுராஜா(சாந்தன்) ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிசாந்தி ஜெயரூபன், கிறிஸ்ரி மனோரஞ்சன், ஹனா சுகந்தன், தனஞ்சயன் நித்தியரத்தினம், நித்தியராஜன் நித்தியரத்தினம், ஜெயநிதி ஜீவரூபன், ஜெயவதி தனராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயருஷா, ரனுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 06:00 மணியளவில் இறுதி அஞ்சலி ஆராதனை நடைபெற்று, 23-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தோப்பு ஏழாலை தெற்கில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் ஏழாலை தெற்கு C.A.C.M சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

Address:- Get Directionதோப்பு, ஏழாலை தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:-

ரூபன்Mobile : +94 77 731 1772