Mai 9, 2024

வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

கோப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்றது. நீர்வேலிப் பகுதியில் அமையப்பெற்ற அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னால் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலசிங்கம் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி, அர்ஜுன் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.