Mai 1, 2024

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்பாணம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் மணிவண்ணன் உட்பட 20 பேர்கள் மீது பிரதிவாதிகளாக பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், இந்த வழக்கு தொடர்பில் குறித்த நபர்களுக்கு எதுவித அறிவித்தல்களும் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து நீதிமன்றில் சட்டத்தரணிகளான மணிவண்ணணும், சுகாஸ் அவர்களும் முன்னிலையாகியிருந்தனர்.