April 28, 2024

இந்திய பெண்களைப்பற்றி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?

அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் உரையாடல்கள் அடங்கிய ரகசிய டேப்பை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் இந்திய பெண்களை அவர் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

இந்த உரையாடல் பற்றி வரலாற்றாசிரியர் கேரி ஜெ. பாஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

இவர் வங்கதேசம் உருவாக காரணமான, 1971 இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றியும்,

அதில் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் இனவெறுப்புடன் நடந்து கொண்டதையும் விவரித்தவர்.

நிக்சன் அமெரிக்காவின் 37-வது அதிபராக 1969 முதல் 1974 வரை பொறுப்பு வகித்தவர்.

சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ரகசிய உரையாடல்கள் அடங்கிய டேப், முன்னாள் அதிபர் நிக்சனின் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டு,

அவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் இருக்கிறது. இந்தியர்கள் பரிதாபகரமானவர்கள் என கூறியுள்ளதாக பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் பற்றி ஆபாச கருத்துக்களையும் அந்த உரையாடலில் நிக்சன் கூறியுள்ளார்.

உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள். பாலுணர்வு அற்றவர்கள்.

அவர்கள் எப்படி பிள்ளை பெறுகிறார்கள் என பேசியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,

இந்த ரகசிய ஆடியோ டேப் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்