Mai 8, 2024

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது!

யாழ் மாவட்டத்தில்  மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி முரளிதரன் பிரதேச செயலர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதோடு அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு திட்டங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ள