Oktober 23, 2024

முறுகுகின்றனர் பங்காளிகள்!

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறும், ஆளும் கட்சியின் பங்காளிகள் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில், 10 பங்காளி கட்சிகளே மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், கொரோனா தொடர்பான தரவுகளை திட்டமிட்டு சிதைக்கும் அதிகாரிகள் மீது  தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.