Mai 18, 2024

பாணந்துறையில் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்த பெண்!

பாணந்துறை பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்த நிலையிலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை நகரிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ்ஸில் சென்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசனத்தில் அமர்ந்தவாறு நித்திரை கொள்ளும் விதமாக இருந்த பெண் மீது நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த பெண்ணை நித்திரையிலிருந்து எழுப்ப நடத்துநர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த பெண்ணிடமிருந்து எந்தவித அசைவுகளையும் அவதானிக்காத நடத்துநர், பெண்ணை அதே பஸ்ஸில் பாணந்துறை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.