März 31, 2025

 

வடக்கில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று  மரணமடைந்துளளார்.

சுன்னாகம் ஸ்கந்தரோதயா ஆரம்பப்பிரிவு அதிபர் தயானந்தன் இன்று காலை திடீர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 09 ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றிருந்தார்.

இதனிடையே கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.