September 19, 2024

1500ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1592 ஆக அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில், அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானதாகவும், அதன் எண்ணிக்கை 1526 ஆகும்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு முறைப்பாடுகள் 58ம் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert