Oktober 23, 2024

புதிய இடத்தில் வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் .

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது.

இந் நிலையில் இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக அலுவலகத்தை நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் இன்றைய தினம் அலுவலகம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத் சந்திர தலைமையில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 24 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட குறித்த கட்டடமானது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அலுவலகமாக இன்று முதல் செயற்பட உள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert