September 19, 2024

நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமே பொதுவேட்பாளர் ?

அரச சார்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருடன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நெருக்கம் காண்பித்து வருகின்ற நிலையில் ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என ஈபிடிபி கட்சி  தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சிவில் அமைப்புகள் என்று கூறிக்கொள்பவர்களும் சிதறுண்டு போய் இருக்கின்ற ஏழு குழுக்களும் செய்துகொண்ட ஒப்பந்தமானது மாறி மாறி வந்த அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றியது என்பதற்கு அப்பால் இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்பதற்கான உதாரணமாகும்.

அடுத்தவருட நடுப்பகுதிக்கு பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே உதிரிகள் எல்லாவற்றையும் ஓரணியில் திரட்ட அரங்கேற்றிய நாடகமே தவிர இதனால் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிட்டாதெனவும் ஈபிடிபி தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert