September 19, 2024

விஞ்ஞாபனத்தில் சமஸ்டி :சிறீதரன் கோரிக்கை

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் எதிர்வரும் மாதம் 10 ,11ஆம் திகதிகளில் மத்திய குழு கூடி பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடத்த முடியாதவர் என்று எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

எனினும் தமது கட்சியைச் சேர்ந்தவரின் கருத்திற்கு வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல .சி.வி.விக்கினேஸ்வரன் தான் பதிலை வழங்க வேண்டும் எனவும் சி.சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert