Oktober 22, 2024

மன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பல்துறை ஆளுமை மிக்க ‚கம்பிகளின் மொழி பிறேம்‘ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அடம்பன்  வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

இதன்போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

‚கம்பிகளின் மொழி பிறேம்‘ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert