September 28, 2024

ஆர்ப்பாட்டமொருபுறம்:கைது மறுபுறம்!

அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதுணைத் தூதரகம் முன்பாக  உள்ளுர் மீனவர்கள் போராட்டமொன்றை, இன்று செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்துள்ளனர்.

இந்திய பிரதமரது வருகைக்கு முன்னோடியாக வெளிவிவகார அமைச்சர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ள நிலையில் உள்ளுர் மீனவர்களது போராட்டம் வெடித்துள்ளது.

இதனிடையே நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளது. கைதான மீனவர்கள் 4 பேரும் தமிழகத்தின் இராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert