Oktober 23, 2024

வடக்கில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளராக உருவாகியுள்ளனர்

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவெடுத்தூள்ளார்கள் என வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் இ.சசீலன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் கற்கைநெறியின் ஆடை வடிவமைப்பிற்கான தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 2016 ஆம் முதல், 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளார்கள்.

குறித்த யுவதிகளில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக வடமாகாணத்தில் உருவாக்கியுள்ளார்கள் .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert