September 16, 2024

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்  வியாழக்கிழமை (01) நடைபெற்றது.

 வட தமிழீழம் யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் நிலக்சனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணியப்பட்டு,  மலர்வணக்கம் செலுத்தப்பட்டு சுடரேற்றப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுததாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டு படுகொலை செய்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert