September 8, 2024

யாழில் கையெழுத்து போராட்டம்

தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என கோரியே கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 

குறித்த கையெழுத்து போராட்டம்  17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert